Ads 468x60px

இந்த தளம் பிடித்திருந்தால் +1 செய்யலாமே !


18 January, 2012

13 சீறுகின்றாள் செந்தமிழ்த் தாய் !


 தமிழ் பேச
கூச்சப்படும் தமிழா !
நான் செந்தமிழ் தாய்
பேசுகிறேன்

ஆங்கிலம் இணைப்பு மொழி
தானே !ஏன் உயிர்ப்பாக
நினைக்கிறாய் ?


ஆங்கிலத்தை அரவணை
தவறில்லை! தமிழை  ஏன்
துறவறம் கொள்ள செய்கிறாய் ?

என்னை கொன்று போடும்
தமிங்கலத்தில் பேசும் நீ
செந்தமிழ் பேச
நா தழுதழுப்பது ஏன் ?

உன் தாயும் நானும்
ஒன்றல்லவா -உன் தாய் மொழி அல்லவா
நான் !

நாளைய உலகில்
தமிழ் இருக்கட்டும்
இறக்கச் செய்திடாதே !
(* ஈகரை வலைத்தளம் சமீபத்தில் நடத்திய கவிதைபோட்டிக்காக நான் எழுதிய கவிதை இது ..)


உங்கள் பார்வைக்கு :



இந்த பதிவு பிடித்திருந்தால் குறைந்தது +1 ஓட்டு பட்டையிலாவது வாக்களிக்கலாமே!

13 comments:

சேகர் said...

நன்றாக உள்ளது...நேரம் இருந்தால் எனது வலைபூவிற்கு வருகை தரவும்..

சி.பிரேம் குமார் said...

கண்டிப்பாக அன்பரே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஹேமா said...

ம்...தமிழ்ப்பற்று கவிதையில் தெரிகிறது.வெற்றிக்கு வாழ்த்துகள் பிரேம் !

mohandivya said...

அருமையானபகிர்வுக்கு நன்றி தல

dhanasekaran .S said...

அருமையான கவிதைவாழ்த்துகள்.

சி.பிரேம் குமார் said...

நன்றி அன்பரே உண்மை தான்

சி.பிரேம் குமார் said...

நன்றி அன்பரே வருகைக்கு

சி.பிரேம் குமார் said...

நன்றி அன்பரே வருகைக்கு

Kalidoss Murugaiya said...

கவிதை அருமை.வாழ்த்துக்கள்

பிரேம் குமார் .சி said...

@Kalidoss Murugaiya//நன்றி அன்பரே

அரசன் சே said...

ஒவ்வொரு நவீன தமிழன் என்கிற போர்வையில் சுழலும் மனிதங்கள் இதை கட்டாயம் படிக்க வேண்டும் ..
உணர்வுள்ள என் தமிழருக்கு வாழ்த்துக்கள்

சசிகலா said...

வலைச்சரத்தில் தங்கள் பதிவை பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .

Seeni said...

nalla kavithai!